இலங்கையில் பெண் சுற்றுலா பயணியை பாலியல் உறவுக்கு அழைத்து ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது
கொழும்பு, நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், இலங்கையில் தனியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதை சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இவ்வாறு 3 நாட்கள் அவரது சுற்றுலா பயணம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் நான்காவது நாள் அவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. இது குறித்து அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார். அதில், “நான் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் என்னை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நான் சாலையோரம் இருந்த கடையில் ஏதாவது சாப்பிடலாம் என்று ஆட்டோவை நிறுத்த சொன்னேன். அப்போது என்னை பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென ஆட்டோவிற்கு அருகில் வந்து என்னிடம் பேசத் தொடங்கினார். முதலில் அவர் நட்பாக பேசுவதுபோல் தெரிந்தது. ஆனால் நான் எங்கு தங்கியிருக்கிறேன் என்று அவர் கேட்டார். அவர் எதற்காக இதையெல்லாம் கேட்கிறார் என்பது எனக்கு புரிந்தது. பின்னர் அவர் என்னை பாலியல் உறவுக்கு அழைத்தார். அதோடு, எனக்கு முன்பாகவே ஆபாச செயலில் ஈடுபட்டார். இந்த சம்பவம் எனது சுற்றுலாவை கெடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் எனது மனஉறுதியை இந்த சம்பவம் சற்று குறைத்துவிட்டது. தனியாக பயணம் செய்யும் பெண்கள் சந்திக்கும் சவால் இது. துரதிருஷ்டவசமாக இதுதான் நமது எதார்த்த நிலை. அதே சமயம், இந்த ஒற்றை சம்பவம் முழு இலங்கையை பிரதிபலிக்காது. நான் இங்கு சந்தித்த உள்ளூர் மக்கள் மிகவும் அன்பானவர்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த சுற்றுலா பயணியின் வீடியோவில் பதிவாகி இருந்த 23 வயது வாலிபரை போலீசார் தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு இலங்கை மக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவிட்டு, பெண் சுற்றுலா பயணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
