நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 9 மலையேற்ற வீரர்கள் பிணமாக மீட்பு
காத்மாண்டு, நேபாளத்தின் வடகிழக்கில் யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் கொண்ட ஒரு குழு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் அனைவரும் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியானது. மாயமானவர்களை தேடும்பணி நடந்து வந்தது. இந்த நிலையில் மீட்பு பணிக்குப் பின்பு மொத்தம் 7 மலையேற்ற வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் இத்தாலியர்கள், மேலும் கனடா, பிரான்ஸ், ஜெர்மன் நாட்டை சேர்ந்த தலா ஒருவர் இறந்துள்ளது அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேலும் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதேபோல கடந்த 28-ந்தேதி பன்பாரி சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 3 மலையேற்ற வீரர்கள் மாயமாகி இருந்தனர். அவர்களில் ஒருவர் 2 தினங்களுக்கு முன்பு மீட்கப்பட்டார். மற்ற இருவரும் குடிசைக்குள் இருந்தபடி பனிச்சரிவில் புதைந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
