Rueil-Malmaison இல் கோர விபத்து! - மூவர் பலி!!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Rueil-Malmaison இல் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலும் அறியமுடிவதாவது, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Oise மாவட்டத்தின் Rueil-Malmaison பகுதி நெடுஞ்சாலை N13 இல் விபத்து ஏற்பட்டுள்ளது. மகிழுந்து ஒன்றில் இருந்த சாரதி உட்பட மேலும் இருவர் பலியாகியுள்ளனர். 21 வயதுடைய நபர் ஒருவர் மோசமான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விபத்து காலை 6.44 மணிக்கு இடம்பெற்றுள்ளது Avenue Paul-Doumer மற்றும் Rue Marie-Levasseur பகுதிகளை இணைக்கும் முனையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த மகிழுந்து ஒன்று ட்ரக் வக கனரக வாகனம் ஒன்றில் மோதியுள்ளது. அதை தொடர்ந்து மகிழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. மகிழுந்துக்குள் இருந்த நால்வரில் சாரதியும், மேலும் இருவரும் பலியாகியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
50 தீயணைப்பு படை வீரர்கள் வரை களத்தில் இருந்ததாகவும், விபத்தினால் சில உந்துருளிகள் உட்பட உணவகம் ஒன்றினது வெளி இருக்கைகளும் உடைந்து நொருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.