ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: 4 பேரிடம் விசாரணை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்த, அரபி கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் என, நான்கு பேரை, 10 நாட்கள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட, அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் பலியானார்.
இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முதலில், ஜமேஷா முபின் கூட்டாளிகள், 11 பேரை கைது செய்தனர். இவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில், ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கின.
இவற்றை ஆய்வு செய்த போது, சென்னை மற்றும் கோவையில் உள்ள, அரபிக் கல்லுாரியில், முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்படுவது தெரியவந்தது.
இது தொடர்பாக, பிப்ரவரியில், 21 இடங்களில் சோதனை செய்து, சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமரி, 55; கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹுசைன் பைசி, 38; கோவை குனியமுத்துார் இர்ஷாத், 32; பொள்ளாச்சி சையது அப்துர் ரஹ்மான் உமரி, 52, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், சையது அப்துர் ரஹ்மான் உமரி, அரபி கல்லுாரி முன்னாள் பேராசிரியர் உள்ளிட்டோர், சென்னை மற்றும் கோவையில் உள்ள, அக்கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.
சையது அப்துர் ரஹ்மான் உமரியிடம், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் தொடர்பான புத்தகங்கள், நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது தொடர்பான திட்டங்கள் குறித்த ஆவணங்கள் இருந்தன.
மற்ற மூவரிடமும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பான குறிப்புகள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை,:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்த, அரபி கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் என, நான்கு பேரை, 10 நாட்கள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
