''தேர்தல் முடிஞ்சதும் வாங்க..'': பிரதமர் மோடியை பரஸ்பரம் அழைக்கும் ரஷ்யா - உக்ரைன் அதிபர்கள்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குச் வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவை சமாதானம் செய்யும் நாடாக தாங்கள் பார்க்கிறோம் என்று இரு நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அதிபர் ஆகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குச் வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடைசியாக 2018ம் ஆண்டு ரஷ்யா சென்றார்.
இறையாண்மை
பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு இந்தியா ஆதரவளித்து வருவதற்கு பிரதமர் மோடியிடம் நன்றி தெரிவித்தேன்.
இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் வந்து படிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்தேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குச் வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
