வேட்பாளர் மீதுள்ள குற்ற வழக்கு விபரம் பத்திரிகையில் விளம்பரம் செய்ய உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில், விளம்பரம் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்கு விபரங்களை, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும்.
அதேபோல், குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளும், அவற்றை வெளியிட வேண்டும்.
குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியை, ஊடகங்களில், கட்சி இணையதளத்தில், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன், இவற்றில் எது முதன்மையானதோ, அதன்படி வெளியிட வேண்டும்.
வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, பத்திரிகை மற்றும் 'டிவி'களில், உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டும்.
இவ்விளம்பரங்கள், வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளுக்கு மறுநாள் முதல் ஓட்டுப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் வரை, மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிட வேண்டும்.
இதுகுறித்த முழு விபரங்களை, www.elections.tn.gov.in இணையதள முகவரியில் காணலாம்.
சென்னை:'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில், விளம்பரம் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன்




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
