ஓர்லி விமான நிலைய தாக்குதல்தாரிக்கு ஆயுதம் வழங்கியவர்கள் - கைது!!
ஓர்லி விமான நிலையத்தில் கடந்தவாரத்தில் இராணுவத்தினரை தாக்கிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர்.
ஓர்லி சர்வதேச விமானநிலையத்தில் தாக்குதல் நடத்தி பலியகியிருந்த நபர் எந்த இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடனும் தொடர்பில் இல்லை என்ற போதும், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாக்குதல்தாரிக்கு ஆயுதம் வழங்கியதாக இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 30 மற்றும் 43 வயதுடைய இருவர் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த இருவரும் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளனரா? இவர்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தது எப்படி? இவர்களுக்கும் தாக்குதல்தாரிக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.