லண்டன் பயங்கரவாதத் தாக்குதல் - பிரெஞ்சு மாணவர்கள் படுகாயம்!!
இன்று பிற்பகல் 2h40 அளவில் லண்டனின், பாராளுமன்றத்தருகில் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், சிற்றுந்து ஒன்று சனத்திற்குள் புகுந்து மக்களை மோதிப் பின்னர் பாராளுமன்னத்தின் கம்பி வேலியுடன் மோதி நின்றுள்ளது.
இந்தச் சிற்றுந்த மோதியதில், பிரான்சின் lycée Saint-Joseph de Concarneau மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தங்களது வகுப்பு மாணவர்களுடன் கல்விச் சுற்றுலாவிற்காக லண்டனிற்குச் சென்றிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய மாவர்கள் பிரித்தானியக் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு பாது.காப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை பிரான்சிற்குத் திரும்ப உள்ளனர்.