கேப்பாபிலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு போராட்டம்
கேப்பாபிலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவிக்கும் முகமாக (22) பிற்பகல் 4 திருகோணமலை சிவங்கோயிலுக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றது.
பசுமைத்திருகோணமலை-சிவில் சமூகங்களின் அமையம்-தமிழர் ஜனநாயக இயங்குதளம் ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில் 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு-அபிவிருத்தி-மதம்.வனப்பாதுகாப்பு.தொல்லியல் துறை ஆகியவற்றின் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள வேண்டும் என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.