சூதாட்ட விடுதியில் 5 மில்லியன் யூரோக்கள் மீட்பு! - ஐவர் கைது!!
பரிசில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் இருந்து ஐந்து மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான ரொக்கப்பணம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில், கடந்த திங்கட்கிழமை இரவு அதிரடியாக காவல்துறையினர் உள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார்கள். இதில் ஐந்து மில்லியன் யூரோக்கள் யூரோக்கள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கணக்கு காட்டப்படாத சட்டவிரோத பணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளர். அனைவரும் 70 வயதுகளை உடையவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. சூதாட்ட விடுதியில் உள்ள coffers பகுதியில் இந்த பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சூதாட்ட விடுதி மூடப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.