சிறிலங்கா தொடர்பில் ட்ரம்பிடம் முக்கிய கோரிக்கை விடுத்த தமிழ் புலம்பெயர் அமைப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்கா தொடர்பில் ட்ரம்பிடம் முக்கிய கோரிக்கை விடுத்த தமிழ் புலம்பெயர் அமைப்பு!

 அமெரிக்காவினால் சிறிலங்காவில் வழங்கப்படுகின்ற மில்லேனியம் சவால்களுக்கான நிதியை இடைநிறுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
“ட்ரம்பிற்கான தமிழர்கள்” என்ற புலம்பெயர் அமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சிறிலங்கா தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்படவில்லை.
 
இவ்வாறான நிலையில் இந்த நிதி சிறிலங்காவுக்கு வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியின் ஊடாக வருடாந்தம் சிறிலங்காவுக்கு 900 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை