சிவலிங்கா படத்தயாரிப்பாளரின் கோபம்

PARIS TAMIL  PARIS TAMIL
சிவலிங்கா படத்தயாரிப்பாளரின் கோபம்

 ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை பிப்ரவரி 17 அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். திடீரென லாரன்ஸின் மற்றொரு படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் பிப்ரவரி17 அன்று வெளிவருவதாக உள்ளே நுழைந்தது. இது தொடர்பான பிரச்சனையில் திரையுலக நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்து சிவலிங்கா படத்தை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அதன் பிறகு மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு 'பிப்ரவரி 17 முதல்' என நாளிதழ்களில் நேற்றுவரை விளம்பரம் வெளியானது.

 
இன்றிலிருந்து 'அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி பெற அகிலமெங்கும் பிப்ரவரி 24 முதல்' என விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் தொடர்பாக பல்வேறு பஞ்சாயத்துக்கள் இருப்பதால் இந்த வாரம் வெளியாக இருந்த படம் அடுத்த வாரத்துக்கு தள்ள வைக்கப்பட்டுள்ளது.
 
பிப்ரவரி 17 அன்று சிவலிங்கா படத்தை வெளியிட்டிருப்போம். எங்களையும் கெடுத்து தன்னுடைய படத்தையும் தள்ளி வைத்துவிட்டனர் என்று சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் செம கடுப்பில் இருக்கிறாராம். தங்கள் படத்தை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்ததில் ராகவா லாரன்ஸுக்குத்தான் அதிக பங்கு இருக்கிறதாம். எனவே சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளரின் கோபம் லாரன்ஸ் மீதும் திரும்பியுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

மூலக்கதை