அவுஸ்ரேலியாவை சொந்த மண்னில் சாய்க்குமா இலங்கை அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
அவுஸ்ரேலியாவை சொந்த மண்னில் சாய்க்குமா இலங்கை அணி!

 இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டீ-20 போட்டி, இன்று மெல்பேர்னில் நடைபெற்று வருகின்றது.

 
மூன்று போட்டிகள் கொண்ட டீ-20 தொடரில் விளையாட இலங்கை அணி அவுஸ்ரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்தியூஸ் காயமடைந்துள்ளதால் இத்தொடரில் உபுல் தரங்க அணியின் தலைவராக செயற்படுகிறார்.
 
மேலும், இத்தொடரில், முன்னாள் டீ-20 தலைவரும், புயல் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்க, ஒன்றரை வருடங்களுக்கு பின் அணியில் இணைந்துக்கொண்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நடைபெற்று முடிந்த அவுஸ்ரேலியா பிரதமர் தெரிவு அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில், அவுஸ்ரேலிய அணி செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இரு அணிகளும் இளம் வீரர்களை கொண்ட அணி என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை கணிப்பது கடினம்.

மூலக்கதை