விடைதாள் திருத்த பணிகளுக்காக விடுமுறை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
விடைதாள் திருத்த பணிகளுக்காக விடுமுறை

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராத பத்திர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

தொடர்ந்து 30ஆம் திகதிவரை இடம்பெறும் இப்பணிகளுக்காக 4 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குருநாகல் வெலகெதர வித்தியாலயம், குருநாகல் சி.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி மகளிர் பாடசாலை, பொரளை கண்ணங்கர மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளை இந்த நாட்களில் மூடப்படவுள்ளன.

மூலக்கதை