மைத்திரி கிட்டார் வாசித்ததனை பேஸ்புக்கில் பார்த்து ரசித்த மஹிந்த!
நேற்றைய தினம் கென்கல்ல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு இடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிட்டார் வாசிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி கிட்டார் வாசித்த புகைப்படங்கள் ஊடகங்களில் ஜனாதிபதியின் ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டிருந்தது.
இன்று காலை ஓய்வு நேரத்தில் முன்னாள் தனது தொலைப்பேசயில் பேஸ்புக் பதிவுகளை பார்வையிட்ட நிலையில் ஜனாதிபதி கிட்டார் வாசித்த புகைப்படத்தை நீண்ட நேரம் மஹிந்த பார்வையிட்டுள்ளார்.
அவர் இந்த புகைப்படத்தை பார்வையிட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்தவின் ஊடக பிரிவினால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.