பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ

விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ பொங்கல் தினத்தையொட்டி இன்று திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கான தியேட்டர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

பட ரிலீஸ் தள்ளிப்போனாலும் பொங்கலை யொட்டி விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியது. ரேணிகுண்டா பட இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் இப்படத்தை ஏ. எம். ரத்னம் தயாரிக்கிறார்.

இதுபற்றி இயக்குனர் கூறும்போது,’முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

தற்போது திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு தொங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 70 நாட்கள் நடக்கிறது.

கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. பட தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.


.

மூலக்கதை