இறுதிக்கட்ட பிரார்த்தனையில் அதிமுக தொண்டர்கள்..!
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகமிக மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால்,அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதிக்கட்ட பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலை, மிகமிக மோசமாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை வாசலில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள்,ஜெயலலிதா குணமடைய வேண்டி பல்வேறு பிரார்த்தனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.