‘நான் உயர பறக்க விஜய்தான் காரணம்…’ அருண்ராஜா காமராஜ்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், பாடகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.
கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதிவந்தாலும், கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் இவரை உலகளவில் கொண்டு சேர்த்தது.
இப்பாடலை எழுதி இவரே பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜீலை மாதம் இறுதியில் விஜய் இவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் இன்று விஜய்யை சந்தித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.
இச்சந்திப்பு பற்றி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது… “நான் உயர பறக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.