சிறந்த தீர்வுத்திட்டதைபெற தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடவேண்டும்! வியாழேந்திரன் எம்.பி

தமிழ்வின்  தமிழ்வின்
சிறந்த தீர்வுத்திட்டதைபெற தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடவேண்டும்! வியாழேந்திரன் எம்.பி

சிறுபான்மை சமூகம் சிறந்த தீர்வுத்திட்டத்தினை பெறவேண்டுமாகவிருந்தால் தமிழ் அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து பணியாற்றவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தில் புனரமைக்கப்பட்ட மாணவர்கள் விடுதி இன்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த விடுதியை திறந்துவைத்தார்.

தெற்காசிய கனடா வாழ் மக்களின் மனிதாபிமான அமைப்பின் நிதியுதவியுடன், மனித நேய கரங்கள் அமைப்பினால் இந்த விடுதி புனரமைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் மிகவும் மோசமான நிலையில் மாணவர்கள் தங்குவதற்கு ஏதுவற்ற நிலையில் இருந்த குறித்த விடுதியின் நிலமை தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாசினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்க கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து குறித்த விடுதி புனரமைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் பெறப்பட்ட விடுதிக்கான தளபாடங்களும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக காணப்பட்ட விடுதியின் குறைபாட்டினை நீக்கியமையை பாராட்டும் வகையில் பாடசாலை சமூகத்தினால் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை