2வது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

  தினத்தந்தி
2வது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ராவல்பிண்டி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 11ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

மூலக்கதை