எஸ்.ஏ. டி20 லீக்: அந்த இந்திய வீரர் மட்டும் வர வேண்டாம்..ஏனெனில். - டு பிளெஸ்சிஸ்
கேப்டவுன், இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் 4-வது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி முதல் பிப்ரவரி 24-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், எம்.ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளை சேர்ந்த உரிமையாளர்களே வாங்கியுள்ளனர். இந்த தொடரில் ஓய்வு பெற்ற இந்திய வீரர்களை விளையாட பல தரப்பினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான பாப் டு பிளெஸ்சிஸ் உள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டு பிளெஸ்சிஸ் இடம் எந்த ஒரு இந்திய வீரர் எஸ்.ஏ டி20 லீக்கில் விளையாட கூடாது? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் எஸ்.ஏ டி20 லீக்கில் பும்ரா மட்டும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் உலகிலேயே எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்து வீச்சாளர் பும்ரா. அவரை இந்த தொடரில் பார்க்க மாட்டோம் என்று நம்புகிறோம்” என கூறினார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
