முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்

  தினத்தந்தி
முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்

கொல்கத்தா, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - எய்டன் மார்க்ரம் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்க்ரம் தனது முதல் ரன்னை எடுக்க 23 பந்துகள் எடுத்து கொண்டார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரிக்கல்டன் 23 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து முல்டர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மார்க்ரமையும் (31 ரன்கள்) பும்ரா காலி செய்தார். அடுத்து வந்த பவுமா (3 ரன்), குல்தீப் சுழலில் சிக்கினார். பின்னர் டோனி டி சோர்ஜி களமிறங்கினார். தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் அடித்துள்ளது. முல்டர் 22 ரன்களுடனும், டோனி டி சோர்ஜி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

மூலக்கதை