என் கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கின்றேன் - சுருதி பிரியா பரபரப்பு அறிக்கை
சென்னை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறியிருந்த, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து ‘அது என்னுடைய குழந்தை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்' என்று ரங்கராஜ் கூறியிருந்தார். ‘அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரவேண்டும்’ என்று ஜாய் கிரிசில்டாவும் அழைப்பு விடுத்தார். பரபரப்பான இந்த சூழலில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியும், வக்கீலுமான சுருதி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- "நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டபோது, ஜாய் கிரிசில்டாவிடம் இருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளைப் பெற்றேன். ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், 'ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும்', ‘வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும்', 'மாதம் ரூ.8 லட்சம் வழங்க வேண்டும்', ‘இப்போது எனக்கு ரூ.10 லட்சம் வேண்டும்', 'ரங்கராஜ் தனது மனைவி சுருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வரிகளே ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம், பணம் பறிப்பது மற்றும் எங்கள் குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது என்பதை தெளிவாக காட்டுகின்றன. நான் என் கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கின்றேன். அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்." இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
