ஜாய் கிரிஸ்டாவின் நோக்கம் இதுதான் - மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி
சென்னை, பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டாவை சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்துத் திருமணம் செய்ததாகவும், என்னுடைய குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டதாகவும் ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கூறியதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து அவர் என்ன குழந்தையா? என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஜாய் கிரிசில்டா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மார்ச் 2025-ல் எனது குடும்பப் படத்தை நான் பதிவேற்றியபோது, ஏப்ரல் 2025-ம் ஆண்டிலேயே ஜாய் கிரிசில்டாவிடமிருந்து இந்த அநாகரீகமான செய்திகள் எனக்கு வந்தன. நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு இதுபோன்ற செய்திகள் ஏன் அனுப்பப்பட்டன? இந்த ஒற்றை உண்மை அவளுடைய இரட்டை வேடத்தையும், தனிப்பட்ட மற்றும் பண ஆதாயங்களுக்காக அவள் ஊடகங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறாள் என்பதையும் அம்பலப்படுத்துகிறது. இந்த செயல்கள் அனைத்தும் பணத்திற்காக மட்டுமே உந்துதல் பெற்றவை மற்றும் எங்கள் குடும்பத்தின் அமைதியை கெடுக்கும் நோக்கில் உள்ளன. என் கணவர் ரங்கராஜிடமிருந்து என்னைப் பிரித்து அவரிடமிருந்து பணம் பறிக்கும் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தும் கடிதத்தை ஜாய் எழுதியுள்ளார். ஜாய்யின் சொந்த கையால் எழுதப்பட்ட கடிதம் அவளுடைய உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது என்பது இப்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.பணம் அல்லது வீட்டையோ அல்லது என் கணவர் ரங்கராஜிடமிருந்து என்னைப் பிரிக்கவோ ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறி அவள் நேர்காணல்களை அளித்து வந்தாலும், அவளுடைய சொந்த வார்த்தைகள் வேறுவிதமாக நிரூபிக்கின்றன.பத்தி 4: ரங்கராஜ் எனது நிதித் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பத்தி 6: ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பத்தி 8: ரங்கராஜ் எனக்கு ஒரு பிளாட் வாங்க வேண்டும்" மற்றும் "ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 தர வேண்டும். பத்தி 9: எனக்கு இப்போது ரூ.10,00,000 வழங்க வேண்டும். பத்தி 12: ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவை விவாகரத்து செய்ய வேண்டும். ஜாயின் கையெழுத்தில் உள்ள இந்த வரிகள், என் கணவரிடமிருந்து பணம் பறித்து, அவரது சட்டப்பூர்வ மனைவியான என்னை அவரிடமிருந்து பிரிப்பதே ஜாயின் நோக்கமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.நான் என் கணவருடன் உறுதியாக நின்று கடைசி வரை அவரைப் பாதுகாப்பேன்” என ஸ்ருதி ரங்கராஜ் கூறியுள்ளார்.A post shared by Shruthi Rangaraj (@shruthi_rangaraj)




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
