இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பொலிஸில் சரணடைந்த கணவன் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பொலிஸில் சரணடைந்த கணவன்  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் மனைவியை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வவுனியா, பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த தினத்தன்று உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் காரணமாக வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பிய போது மகள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட பொலிஸார் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில், பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகி இருந்தது சந்தேகத்தை அதிகரித்தது.  ஈச்சங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்ற தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.  இந்நிலையில் சந்தேகநபரான கணவன் நேற்று (04.11) மாலை ஏறாவூர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை