போலி ஆவணங்களுடன் இலங்கைக்குள் நுழைந்த வெளிநாட்டவர்: நாடு கடத்திய அதிகாரிகள் - லங்காசிறி நியூஸ்
போலி பாஸ்போர்ட் மற்றும் போலிய இதர ஆவணங்களுடன் இலங்கை வந்த செனகல் நாட்டவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.போலி பிரேசிலிய நாட்டின் கடவு சீட்டை பயன்படுத்தி இலங்கை நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டை சேர்ந்த நபர் இன்று(23) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 35 வயது செனகல் நாட்டை சேர்ந்த சந்தேக நபர் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கத்தாரின் தோஹாவிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை 05.45 மணிக்கு வந்து இறங்கியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய செனகல் நாட்டு இளைஞரின் கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் அடைந்த குடிவரவு அதிகாரிகள் உடனடியாக எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் ஆவணங்கள் மீது நடத்திய தொழில்நுட்ப சோதனைகளில் செனகல் நாட்டு இளைஞரின் கடவுச்சீட்டு போலியான பிரேசிலிய கடவுச்சீட்டு என்பதை கண்டறிந்தனர். மேலும் சந்தேக நபரின் உடமைகளை சோதனையிட்ட போது, அவரிடம் உண்மையான செனகல் நாட்டின் கடவுச்சீட்டு இருப்பதும், அத்துடன் நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வந்த கத்தாரின் தோஹாவிற்கே அவரை திரும்ப நாடு கடத்த இலங்கை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
