வெளிநாட்டு காதலனால் ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்: பணம் பறிப்பு முயற்சி முறியடிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் பகுதி இலங்கை சேர்ந்த 25 வயது பெண்ணிடம் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த பல்கலைக்கழக மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய மீட்டியாகொடவில் வசிக்கும் இளம் பெண்ணிடம் இருந்து சுமார் 1 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த போது மீட்டியாகொட பொலிஸ் அதிகாரிகளால் பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் விசாரணையை தொடங்கிய பொலிஸாரிடம், தனக்கு தெரிந்த பிரேசில் நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்ற முயன்றதாக கைது செய்யப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளான்.அந்த பிரேசிலிய நபருடன் சம்பந்தப்பட்ட பெண் கடந்த 4 மாதங்களாக டெலிகிராம் செயலி மூலம் காதல் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து நெருங்கி பழகிய நிலையில், அவரது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டி பணம் கேட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக மாணவரிடம் அந்த பணத்தை கொடுக்குமாறும் பிரேசில் நாட்டை சேர்ந்த நபர் மிரட்டியுள்ளார், இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கொடுக்கவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
