இலங்கையின் முதல் வதிவிட விசா: வரலாற்றில் இடம் பிடித்த ஜேர்மன் நாட்டவர் - லங்காசிறி நியூஸ்
இலங்கை தனது வரலாற்றில் முதல் முறையாக வதிவிட விசாவை வழங்கியுள்ளது. இந்த முக்கிய நிகழ்வானது புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் இந்த முதல் வதிவிட விசாவை ஜேர்மன் பிரஜையான கலாநிதி ப்ரே ட்ரெக்ஸ்செல் (Dr. Prey Drechsel) என்பவர் பெற்றுள்ளார். இந்த அதிகாரப்பூர்வமான விசா வழங்குதலை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால செய்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் வெளிநாட்டினர் இலங்கையில் இந்த நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ளலாம். 5 வருட வதிவிட விசா பெறுவதற்கு 100,000 அமெரிக்க டொலர் அல்லது (அதற்கு நிகரான வெளிநாட்டு நாணய மதிப்பு) இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். இதைப்போல 10 வருட வதிவிட விசா பெறுவதற்கு 200,000 அமெரிக்க டொலர் அல்லது (அதற்கு நிகரான வெளிநாட்டு நாணய மதிப்பு) இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமது முதலீட்டுத் தொகையை வைப்புச் செய்வதற்காக, அங்கீகாரம் பெற்ற இலங்கையின் வங்கியில் விசா நிகழ்ச்சித் திட்டம் வெளிநாட்டு நாணயக் கணக்கு (VPFCA) ஒன்றை திறப்பது கட்டாயமாகும். இந்த புதிய நடைமுறை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
