ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதில் இருந்து, அதிக வசூலை ஈட்டிய இரண்டாவது மாதமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, அதிகபட்சமாக, கடந்த ஏப்ரலில் 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூலானது. அதற்கு பிறகு, அதிக வசூலை குவித்த இரண்டாவது மாதம், நடப்பாண்டு ஜூலை ஆகும்.கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வசூல் 1.16 கோடி ரூபாயாக இருந்தது.ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை, ஆறு முறை வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதத்தில், சரக்கு இறக்குமதியின் வருவாய் 48 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும் சேவைகளின் இறக்குமதி உள்ளிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட, 22 சதவீதம் அதிகமாக உள்ளது.பொருளாதார செயல்பாடுகள் அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
