வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ.,
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருகிறது. மாநிலங்களின் சராசரி வருவாய், கடந்த 2001–02 நிதியாண்டில் 18 ஆயிரத்து, 118 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011–12ல் 68 ஆயிரத்து, 845 கோடி ரூபாயாக அதிகரித்தது. பின், 2021–22ல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.மேலும், வருமான சமத்துவமின்மையும் ஓரளவு குறைந்துள்ளது. தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, வித்தியாசம் 2011 – 12 நிதியாண்டில் 76 சதவீதமாக இருந்தது, 2021- – 22ல் 67 சதவீதமாக குறைந்து உள்ளது. சிக்கிம் மற்றும் கோவாவில் சராசரி தனிநபர் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது.பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தனிநபர் வருமானத்தில் தொடர்ந்து கீழ்நிலையில் இருந்து வருகிறது.இவ்வாறு எஸ்.பி.ஐ., பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
