எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் மிக வேகமாக வளரும் விமான போக்குவரத்து சந்தையான இந்தியாவில், விமான கட்டணங்கள், கடந்த நான்கு மாதங்களில், மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளன.நடப்பு ஆண்டில், கடந்த மார்ச் மாதத்தில் முதன் முறையாக விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதன் பின், கடந்த மே மாதத்தில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் அதிகரித்து உள்ளது. விமான போக்குவரத்துக்கான முக்கியமான 20 வழிகளில், இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், எரிபொருள் விலை அதிகரிப்பாகும். டில்லியில் விமான எரிபொருள் விலை, கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. விமானத்துக்கான செலவினங்களில், கிட்டத்தட்ட 45 – 50 சதவீதம் எரிபொருளுக்கு சென்றுவிடுகிறது.இந்த விலை உயர்வு, நுகர்வோரையும் விமான நிறுவனங்களையும் எந்த அளவுக்கு பாதிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள், துறை சார்ந்த நிபுணர்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
