சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் ; வழக்கை திசை திருப்ப முயற்சி : பெற்றோர் குற்றச்சாட்டு
சென்னை : 'நடிகை சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம். வழக்கை திசை திருப்ப இப்போது நாடகமாடுகிறார்' என, சித்ராவின் பெற்றோர் கூறினர்.
சென்னை, பூந்தமல்லி அருகே கணவர் ஹேம்நாத்துடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த 'டிவி' நடிகை சித்ரா 29, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் 2020 டிச.,9ல் நடந்தது. சித்ராவை தற்கொலைக்கு துாண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2021 மார்ச் 3ல் ஜாமினில் வெளியே வந்தார்.