நான் இப்போ வேற மூடுல இருக்கேன் : கங்கனா

தினமலர்  தினமலர்
நான் இப்போ வேற மூடுல இருக்கேன் : கங்கனா

சர்ச்சைகளையும், கங்கனா ரணவத்தையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா, காலிஸ்தான் தீவிரவாதிகளை கொசுவை நசுக்குதுபோல நசுக்கினார் என்று கூறிய கையோடு டில்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளோடு ஒப்பிட்டு பேசினார். இது சீக்கிய சமூகத்தை சேர்ந்தர்களை புண்படுத்துவதாகவும், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டில்லி சிரோண்மணி குருத்வாரா கமிட்டி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கங்கனா மீது இந்திய தண்டனை சட்டம் 295வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் பயப்படுகிறவரா கங்கனா... சமூகவலைதளத்தில் தான் ஒயின் கோப்பையுடன் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்னொரு நாள், இன்னொரு எப்.ஐ.ஆர் ஒரு வேளை என்னை அவர்கள் கைது செய்ய வந்தால், நான் வீட்டில் வேறொரு மூடில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மூலக்கதை