சுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து சிபிஐ அந்த வழக்கை விசாரித்து வருகிறது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் போலீஸார் ஒருபக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் சுஷாந்திடம் 15 கோடி ஏமாற்றியதாக தெரியவந்த தகவலின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளும் ரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சுஷாந்த்தின் மரணத்துக்கு முன்புவரை, ரியா யாரிடம் எல்லாம் தொலைபேசியில் அதிகமுறை தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்கிற விபரம் தற்போது வெளிப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சுஷாந்த்துடன் 145 தடவை போனில் பேசியுள்ள ரியா, சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவுடன் 287 முறை பேசியுள்ளார் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியள்ளது.
அதுமட்டுமல்ல, தனது முன்னாள் மேலாளரான ஸ்ருதி மோடி என்பவருடன் சுமார் 791 முறை பேசியுள்ளார் ரியா. இந்த ஸ்ருதி மோடி ரியாவிடம் மட்டுமல்ல, சுஷாந்த்திடமும் கடந்த 2019 ஜூலை முதல் 2020 பிப்ரவரி மாதம் வரை வியாபர மேலாளாராக வேலை பார்த்தவர் என்கிற உண்மையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்தவகையில் சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.