ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள்

நாளை (ஆக-9) மகேஷ்பாபுவின் பிறந்தநாள்.. சோஷியல் மீடியாவில் கொண்டாட்ட மனநிலைக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். வழக்கம்போல பொதுவெளியிலும் அவரது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட நினைத்திருந்த ரசிகர்களுக்கு, வேண்டுகோள் ஒன்றை வைத்து அவர்களின் உற்சாகத்துக்கு அணைபோட்டுள்ளார் மகேஷ்பாபு..

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, “எப்போதும் உங்களையும் உங்கள் ஆசீர்வாதங்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.. என்னுடைய பிறந்தநாளன்று நீங்கள் செய்துவரும் நல்ல செயல்களையும் நான் அறிவேன். ஆனால் உலகத்தையே ஒரு கொடிய நோய் அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் இந்த அசாதாரண சூழலில், இந்த வருடம் நம் பாதுகாப்பு என்பது தவிர்க்க முடியாதது. அதனால் இந்தமுறை எனது பிறந்தநாளுக்காக பொது இடங்களில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தயவுசெய்து தவிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார் மகேஷ்பாபு.

மூலக்கதை