ரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்

தினமலர்  தினமலர்
ரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலை வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரிக்கிறது. தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுகிறவர்களில் ஒருவராக சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி உள்ளார்.

இந்த நிலையில் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதோடு அவரிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் ரியா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணமோசடி தொடர்பாக அமுலாக்கத்துறை ரியாவுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து ரியா சக்ரவர்த்தி, அவரது தந்தை, சகோதரன் ஆகிய மூவரும் நேற்று அமலாக்கத்துறை முன் ஆஜரானார்கள். அவர்களிடம் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி இரண்டுக்கும் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதால் ரியா கைது செய்யபபட வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

மூலக்கதை