சென்னையில் மட்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?

தினமலர்  தினமலர்
சென்னையில் மட்டும் அண்ணாத்த படப்பிடிப்பு?

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. அதன்பின் கொரோனா வந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இப்படம் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் உலா வந்தன. படம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் கூட பரபரப்பாகப் பேசினார்கள். கொரோனா தொற்று முழுவதுமாக ஒழிந்தபின்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என ரஜினிகாந்த் சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்தன.

எப்படியும் அடுத்த சில மாதங்களில் இந்த நோய் தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடும் என பலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஐதராபாத், புனே ஆகிய இடங்களில் நடத்தத்தான் முடிவெடுத்திருந்தார்களாம். ஆனால், தற்போது எஞ்சிய படப்பிடிப்புகள் அனைத்தையும் ரஜினிகாந்தின் வசதிக்காக சென்னையிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னையிலேயே அரங்குகளை அமைக்க உள்ளார்களாம். ரஜினிகாந்த் எப்போது வர சம்மதிக்கிறாரோ அப்போது மட்டுமே படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகம் என்கிறார்கள்.

மூலக்கதை