எனக்கு அலர்ஜி.; தேர்தலில் வாக்களிக்க வராதது ஏன்? என பார்த்திபன் விளக்கம்
ஏப்- 1 – ஐ
6-க்கு ஒத்தி வைக்காமல்
‘ஆறு”தல் பிச்சைக்கு கை நீட்டாமல்
நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம்,
King- maker-ராக!
நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல…
ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்…
சில தினங்களுக்கு முன் வாக்குரிமை குறித்து ட்விட்டரில் மேற்கண்டவாறு பதிவிட்டு இருந்தார் நடிகர் பார்த்திபன்.
இந்த நிலையில்…நேற்று ஏப்ரல் 6ல் தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
தான் வாக்களிக்க வராமல் போனது ஏன்.? என்பது குறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில்…
வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும்,இயலாமையும்.
இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட தனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது .
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் அவசியம்.
மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற அலர்ஜி ஏற்படும். அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்ததால் மட்டுமே இப்படி ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…”
என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Actor Parthiban revealed why he is not voting