நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, மருந்துகள் மற்றும் பொறியியல் துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, மதிப்பீட்டு காலத்தில், 86 ஆயிரத்து, 213 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.இதுவே, கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், ஏற்றுமதி, 77 ஆயிரத்து, 745 கோடி ரூபாய் அளவுக்கே நடைபெற்றிருந்தது.கடந்த, 14 நாட்களில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இக்காலத்தில், இறக்குமதி, 6.58 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய இருமாத சரிவுக்கு பின், டிசம்பர் மாதத்திலிருந்தே, ஏற்றுமதி அதிகரிக்க துவங்கி உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை