இழுத்து மூடப்படும் இரு பொதுத்துறை நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
இழுத்து மூடப்படும் இரு பொதுத்துறை நிறுவனங்கள்

புதுடில்லி:மத்திய அரசு, ‘ஸ்கூட்டர்ஸ் இந்தியா, பாரத் பம்ப்ஸ் அண்டு கம்ப்ரசர்ஸ்’ ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்களையும் மூடிவிடும் முடிவுக்கு இறுதியாக வந்துவிட்டது.

இந்த நிறுவனங்களையும் வாங்குவதற்கு, சரியான நபர்கள் அல்லது நிறுவனங்கள் கிடைக்காததால், மூடிவிடும் முடிவுக்கு அரசு வந்துவிட்டது.இந்த இரு நிறுவனங்களும், உத்தர பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருபவை.கடந்த புதன் கிழமை அன்று நடைபெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தில், இந்த இரு நிறுவனங்களையும் மூடிவிடும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனங்களை விற்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், இவற்றை வாங்க யாரும் முன்வரவில்லை.இதையடுத்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை, நிறுவனங்களை மூடிவிடும் முடிவை முன்மொழிந்து உள்ளது.

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம், 1972ம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1975ல், இந்நிறுவனம், உள்நாட்டில், ‘விஜய் சூப்பர்’ எனும் பிராண்டிலும்; வெளிநாடுகளில், ‘லாம்ப்ரெட்டா’ எனும் பெயரிலும் ஸ்கூட்டர்களை தயாரித்து சந்தைப்படுத்தியது. அடுத்தகட்டமாக, ‘விக்ரம்’ எனும் பெயரில், மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்தது.நாளடைவில், சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாமல், நஷ்டத்தை சந்தித்து, தற்போது, முற்றாக மூடப்பட்டுவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

மூலக்கதை