விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கிறேனா? - சுரேஷ்கோபி விளக்கம்
இயக்குனர் பூரி ஜெகன்நாத் முதன்முதலாக இந்தியில் இயக்கி வரும் பைட்டர் என்கிற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இதன்மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் விஜய் தேவரகொண்டா. அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை நடிகை சார்மி கவுர், இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரும் இதில் ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி நடிக்கிறார் என ஒரு தகவல், சில நாட்களுக்கு முன் வெளியானது. அதாவது விஜய் தேவரகொண்டாவுக்கு தந்தையாக நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சுரேஷ்கோபி. இதை தொடரந்து பூரி ஜெகன்நாத் தரப்பில் இருந்து இந்த தகவலை மறுத்துள்ளனர்.