கேலரியில் தூங்கிய ரவிசாஸ்திரி: ரூ10 கோடி சம்பளம் தந்தா இப்படிதான்...ரசிகர்களின் ‘மீம்ஸ்’ அட்டாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேலரியில் தூங்கிய ரவிசாஸ்திரி: ரூ10 கோடி சம்பளம் தந்தா இப்படிதான்...ரசிகர்களின் ‘மீம்ஸ்’ அட்டாக்

ராஞ்சி: ராஞ்சியில் நடந்த தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி மெகா வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. நேற்றைய போட்டியின்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வீரர்களுக்கான கேலரியில் போட்டியை பார்த்தவாறே தூங்கியதால் அவரை ரசிகர்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே ஒரே ‘போராகத்தான்’ இருக்கும் என்ற கருத்து இருக்கும் என்றாலும் கூட, இதனை உறுதி செய்யும் வகையில், ரவி சாஸ்திரி தூங்கியது இணையதளவாசிகளுக்கு ‘மீம்ஸ்’ போட வசதியாக மாறிவிட்டது.

ரவி சாஸ்திரி பொதுவாக இந்திய கிரிக்கெட் தொடரின் போதெல்லாம், பீர் பாட்டிலும் கையுமாகவும், பெண்களுடன் போட்டோ என்று ஜாலியாக இருப்பார்.

அப்போதெல்லாம் ரசிகர்களிடம் சிக்கி வதைபடுவது போலவே, தற்போதும் சிக்கியுள்ளார். ரசிகர்களின் மீம்ஸ்களில், இரு கைகளை நீட்டி ரவி சாஸ்திரி நின்ற போட்டோவை சிக்கன், பீர், மற்றும் டைட்டானிக் ரோஸ் என்று படு கலாய் கலாய்த்தனர்.

இந்திய பவுலர்கள், அனல் வேகத்தில் பவுலிங் செய்து தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை திணறிடித்த நேரத்தில் ரவி சாஸ்திரி தூங்கியது உங்களுக்கே நல்லதாக இருக்கா? இதற்குத்தான் ரூ.

10 கோடி சம்பளமா? அப்படி என்றால் இத்தனை சம்பளத்தை கொடுத்தால், இப்படித்தான் தூங்குவார்கள் என்று பலவாறாக கிண்டலடித்துள்ளனர்.

.

மூலக்கதை