சல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா

தினமலர்  தினமலர்
சல்மானின் ஆக்ஷன்  த்ரில்லர் படம் ராதே: பிரபு தேவா

நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான தமிழ் படங்களை மட்டுமல்ல; இந்தி படங்களையும் தொடர்ந்து இயக்கி வருகிறார். அந்த வகையில், மூன்றாவது படத்தில், நடிகர் சல்மான் கானுடன் அவர் இணைந்து, ராதே என்ற படத்தை எடுக்கிறார்.

தபாங் 3 படத்தைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கான், இயக்குநர் பிரபுதேவாவுடன் தான் கைகோர்த்திருக்கிறார்.

சல்மான் கானின் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக கருதப்படும் தபாங் படத்தின் மூன்றாவது பாகத்தை, பிரபு தேவா இயக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.

2007ஆம் ஆண்டு வெளியான 'வாண்டட்'('போக்கிரி' இந்தி ரீமேக்), தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் தபாங் 3, ஆகிய படங்களைத் தொடர்ந்து, பிரபு தேவா மூன்றாவது முறையாக சல்மான் கானை நாயகனாக வைத்து இயக்கவுள்ள படத்திற்கு 'ராதே' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 18ல், ராதே படத்தின் பட்ஸ்ட் லுக் போஸ்டர், இந்தி பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் படம் குறித்து, இயக்குநர் பிரபு தேவா கூறியிருப்பதாவது: நடிகர் சல்மான் கான், எனக்கு மிகச் சிறந்த நண்பர். தொடர்ச்சியாக மூன்றாவது படத்திலும் இணைந்து செயல்பட வேண்டிய கால கட்டம் உருவாகி இருக்கிறது. ராதே படத்தில், சல்மான் கான் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஒரே மாதிரியான கதையம்சம் இருக்கும் படங்களை நான் ஒரு போதும் எடுக்க மாட்டேன். அடுத்த ஆண்டு பக்ரீத் நாளுக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதற்கேற்ப பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்தப் புதிய படம் முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லராக உருவாகவுள்ளது. சல்மான் கான் இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக மீண்டும் நடிக்கவிருக்கிறார். படத்தின் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்படும். சல்மானின் சகோதரர் சோஹைல் கான், ரீல் லைப் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து, இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படமும் மிகப் பெரிய அளவில் பேசப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை