டுவிட்டரில் ரசிகர் கலாய்த்ததால் ஆவேசம்: தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை: 20 ஆண்டை நிறைவு செய்த கேப்டன் மிதாலி
சென்னை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 1999ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வருகிறார். அவர், அணியில் ஒருநாள் போட்டியின் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான போட்டியை நிறைவு செய்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 20 ஆண்டு பயணத்தை நிறைவு செய்தார். அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் பலரும் இணையத்தில் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதில் ஒரு இளைஞர், ‘வாழ்த்துக்கள் தமிழச்சி’ என பதிவிட்டிருந்தார். மற்றொருவர், ‘மிதாலிக்கு தமிழ் தெரியாது.
ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மட்டும் பேசுவார்’ என்று பதிவிட்டார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த மிதாலி, ‘தமிழ் என் தாய் மொழி.
நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் இந்தியனாக மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று தமிழில் பதிவிட்டார். மேலும், ‘என் அன்பான சுகுவே, என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள்.
நான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உங்களுடைய அன்றாட ஆலோசனை என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது’’ என்று பதிலடி கொடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள்ளார்.
.