புரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்

நொய்டா: 7-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

நாளை மறுநாள் பிளே ஆஃப், எலிமினேட்டர் ஆட்டங்கள் தொடங்க உள்ளது. டில்லி தபாங், பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ. பி யோத்தா, யு மும்பா, பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், நொய்டாவில் நேற்று இரவு நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் டில்லி தபாங் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

ஆட்டத்தின் இறுதியில் 37-37 என சமனில் முடிந்தது. இதையடுத்து, புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடம் பிடித்தது.

மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்சை 45-33 என்ற கணக்கில் வீழ்த்தி உ. பி யோத்தா அணி வெற்றி பெற்றது.

நேற்றுடன் புரோ கபடியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

.

மூலக்கதை