சாக்ஷி, அபிராமிக்கு இடையே பனிப்போர்

தினமலர்  தினமலர்
சாக்ஷி, அபிராமிக்கு இடையே பனிப்போர்

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்கள் சாக்ஷி மற்றும் அபிராமி இடையே சமூகவலைதளத்தில் பனிப்போர் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான சாக்ஷியும், அபிராமியும் ஆரம்பத்தில் நெருங்கிய தோழிகளாகவே பழகி வந்தனர். பின்னர் கவின் விவகாரத்தில் சாக்ஷிக்கு கெட்டப்பெயர் உருவானது. இதையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிறகு முகென் விவகாரத்தில் அபிராமிக்கும் அதே நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் வீட்டுகளுக்கு விசிட் அடிப்பதை வழக்கமாக்கினார் அபிராமி. எல்லோர் வீடுகளுக்கும் சென்று, அவர்களுடன் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் அவர்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் திடீரென ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்கள், வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸ் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதனால் மற்றவர்கள் பற்றி எதிர்மறையான எண்ணம் உருவாகிறது. எல்லோரும் அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும்' என பூடகமாக பதிவிட்டிருந்தார் அவர்.

இதையடுத்து அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இனி தன்னிடம் பிக்பாஸ் பற்றி யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் தான் அடுத்தக் கட்டத்து நகர்ந்து விட்டதாகவும்' தெரிவித்திருந்தார். மேலும் தான் தனது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அபி கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஏன் இப்படி திடீரென பதிவிட்டுள்ளார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. இதற்கிடையே ரேஷ்மா, சாக்ஷி இடையேயும் டிவிட்டரில் சண்டை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை