புரோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் மீண்டும் சொதப்பல்.. இன்றிரவு தெலுங்கு - மும்பை அணிகள் மோதல்
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 83வது புரோ கபடி லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தமிழ் தலைவாசை ‘ஆல்அவுட்’ செய்த பாட்னா அணி, முதற்பாதியில் 18-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.
பிற்பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் எடுபடவில்லை. பாட்னா அணி அடுத்தடுத்து 3 முறை தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்அவுட்’ செய்து 51-25 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
இப்போட்டியில் 26 புள்ளிகள் குவித்த பாட்னா பைரட்ஸ் அணியின் வீரர் பர்தீப் நர்வால், புரோ கபடி வரலாற்றில் 1,000 புள்ளிகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உ. பி யோத்தா - குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் உ. பி யோத்தா அணி, குஜராத்தை ‘ஆல்அவுட்’ செய்ததுடன் 16-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் குஜராத் அணி நெருக்கடி கொடுத்தும் வெற்றியை நெருங்க முடியவில்லை.
முடிவில் உ. பி யோத்தா அணி 33-26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. இன்று (செப்.
10) நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்- மும்பை அணிகள் மோதும் போட்டி, இரவு 7. 30 மணிக்கு நடைபெறுகிறது.
.