எட்டு கிராமங்களை தத்தெடுத்த மோகன்பாபு

தினமலர்  தினமலர்
எட்டு கிராமங்களை தத்தெடுத்த மோகன்பாபு

கொரோனா தாக்கத்தால் தங்களது வாழ்வாதரங்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வசதி படைத்த பலரும் களத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்பாபுவும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மஞ்சுவும் இணைந்து ஆந்திராவின் சந்திரகிரி தொகுதிக்கு உட்பட்ட எட்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.

இதன்படி இந்த எட்டு கிராமங்களில் உள்ள மக்களுக்கு தினசரி இரண்டு வேலை உணவு வழங்கி வருகின்றனர். அதுமட்டுமட்டுள்ள இந்த எட்டு கிராமங்களுக்கும் சேர்த்து தினசரி மொத்தம் எட்டு டன் காய்கறிகளையும் வழங்கி வருகின்றனர்.. விஷ்ணு மஞ்சுவின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தற்போது வெளிநாட்டில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் இருக்கும் நிலையில், தனது தந்தையுடன் இணைந்து மக்கள் பசி தீர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவருக்கும் அவரது தந்தைக்கும் பாரட்டுக்கள குவிந்து வருகின்றன..

மூலக்கதை