8 கிராமங்களை தத்தெடுத்து உணவளிக்கும் மோகன் பாபு-விஷ்ணு மஞ்சு

FILMI STREET  FILMI STREET
8 கிராமங்களை தத்தெடுத்து உணவளிக்கும் மோகன் பாபுவிஷ்ணு மஞ்சு

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் முடங்கியுள்ளன.

பல நாடுகளில் இதுவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மோடி அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனாவை தாக்கம் தினமும் அதிகரித்துள்ளதால் இன்னும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மஞ்சுவும் இணைந்து ஆந்திராவின் சந்திரகிரி தொகுதிக்கு உட்பட்ட எட்டு கிராமங்களை தத்தெடுத்து உணவளித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்களுக்கு தினசரி இரண்டு வேலை உணவு வழங்கி வருகின்றனர்.

இதற்காக தினசரி 8 டன் காய்கறிகள் தேவைப்படுகிறதாம்.

விஷ்ணு மஞ்சுவின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தற்போது வெளிநாட்டில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Great Gesture Mohan Babu and Vishnu Manchu adopt 8 villages

மூலக்கதை