வருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..!
டெல்லி: பொதுவாக எந்தவொரு அசாதாரண சூழ்நிலையினாலும் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. அதிலும் தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது அடித்தட்டு மக்கள் எனலாம். ஏனெனில் ஒரு புறம் தங்களது வருமானத்தினை இழந்து, கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் தங்களது வேலையினை இழந்து, ஊரடங்கு முடிந்தாலும் உடனடியாக வேலைக்கு செல்லும் நிலையிலும் இல்லை.